கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் மணல் எடுக்க அனுமதி - வசமாக திமுக மா.செ.. வீடியோ லீக்கானதால் பரபரப்பு.!

கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் மணல் எடுக்க அனுமதி - வசமாக திமுக மா.செ.. வீடியோ லீக்கானதால் பரபரப்பு.!



dmk-namakkal-district-secretary-speech-controversy-tren

திமுகவினர் மட்டுமே மணல் அல்ல வேண்டும். அதற்கான அனுமதியை மா.செ பொறுப்பில் இருக்கும் நான் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் தனது கட்சி நிர்வாகிகளை மணல் எடுக்க அனுமதிப்பது தொடர்பாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவில் பேசும் ராஜேஷ் குமார், "இங்குள்ள பிற எம்.எல்.ஏக்கள் மணல் எடுக்க கட்சியினருக்கு அனுமதி வழங்குவது இல்லை. மாறாக நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டு அவர்களிடம் பணம் வசூலித்துக்கொள்கிறார்கள். நான் மட்டும்தான் நமது கட்சியினரும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் மணல் எடுக்க அனுமதி வழங்குகிறேன்" என்று கூறுகிறார்.