இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
என்ன நடந்தது? முதல்வர், திமுக பெண்கள் குறித்து அவதூறு, ஆபாச பேச்சு; இளைஞர் கைது.!
என்ன நடந்தது? முதல்வர், திமுக பெண்கள் குறித்து அவதூறு, ஆபாச பேச்சு; இளைஞர் கைது.!
சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை வைத்துக்கொண்டு, அரசியல் ரீதியான முரண்பட்ட மற்றும் அவதூறான தகவல்கள் பகிரும் செயல்கள் பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறான சர்ச்சை செயல்களை செய்வோர் மீது காவல் துறையினர் புகார் பெற்று உரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக குழு ஒன்றில், பெண்ணின் பெயரில் போலியான கணக்கு உலாவந்தது.
இந்த கணக்கை நிர்வகித்து வந்த இளைஞர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து திருவண்ணாமலை திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையை தொடர்ந்து, பி.வி குளத்தூர் பகுதியை சேர்ந்த ஆர்.டி சுரேஷ் என்ற நபரை நாமக்கல்லில் அவனது கைது செய்தனர்.