#Breaking: திமுக மாணவரணி துணை அமைப்பாளர் நடுரோட்டில் வெட்டி படுகொலை; பதற்றம், பரபரப்பு.. காவல்துறை குவிப்பு.!
#Breaking: திமுக மாணவரணி துணை அமைப்பாளர் நடுரோட்டில் வெட்டி படுகொலை; பதற்றம், பரபரப்பு.. காவல்துறை குவிப்பு.!
நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பட்டறை சரவணன். இவர் திமுக கட்சியில் மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் அண்ணா நகர் பகுதியில் நின்றுகொண்டு இருந்தபோது, இவரை வழிமறித்த மர்ம கும்பல் சரவணனை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது.
இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் பரபரப்பான சூழல் உருவாகி இருப்பதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. மர்ம நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.