தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்.! பரிதாபமாக போன உயிர்.! ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்.!

தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்.! பரிதாபமாக போன உயிர்.! ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்.!



Death of woman who swallowed Teeth while drinking water

சென்னை வள­ச­ர­வாக்­கத்தை அடுத்த ராமா­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த சுரேஷ் என்­ப­வ­ரின் மனைவி ராஜ­லட்­சுமி. 43 வயது நிரம்பிய இவருக்கு 3 பற்கள் சேதமடைந்து இருந்தது. இதனால் கடந்த வாரம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதி­தாக மூன்று செயற்­கை பற்களைக் கட்­டிக்­கொண்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், நேற்று அவர் தண்­ணீர் குடிக்­கும்போது மூன்று பற்களில் ஒரு பல் கழண்டு வயிற்­றுக்­குள் சென்­றுள்­ளது. இத­னால் அவ­ருக்கு வாந்தி, மயக்­கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்­து­வ­ம­னைக்கு குடும்பத்தினர் அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எதுவும் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

பிறகு அவர் மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்து திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்