இந்த காலத்திலும், தமிழகத்தில் இப்படியொரு அவலமா? வைரலாகும் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!!

இந்த காலத்திலும், தமிழகத்தில் இப்படியொரு அவலமா? வைரலாகும் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ!!


deadbody bring using rob from bridge

வேலூரை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இறந்த நிலையில் அவருக்கு இறுதி சடங்குகள் செய்து,  அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மயானத்திற்குள் நுழையும் வழி மற்றொரு சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பண்ணை நிலம் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில் இறந்தவரின் உடலை சுமந்து வந்த உறவினர்கள், ஒரு பாலத்தின் மேலிருந்து பாடையில் கயிறு கட்டி கீழே இறங்கியுள்ளனர். மேலும்  கீழே நின்றுகொண்டிருந்த நபர்கள் சிலர் பாடையை பிடித்து பின்னர் சுமந்து செல்கின்றனர்.

 இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் காலங்கள் எவ்வளவு அறிவியல் பூர்வமாக மாறினாலும் இதுபோன்ற  மனிதரை மனிதரே ஒதுக்கும் இதுபோன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.