"நடுராத்திரியில டீ குடுக்குறதே பெருசு., இதுல சூடா கேட்குதா?".. மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்..!!

"நடுராத்திரியில டீ குடுக்குறதே பெருசு., இதுல சூடா கேட்குதா?".. மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்..!!



Daughter in law killed mother in law for hot tea

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வேலு. இவரின் மனைவி பழனியம்மாள் (வயது 75). தம்பதிகளுக்கு மூன்று மகன்கள், ஒரு மகன் இருக்கின்றனர். சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து கனகு என்ற மனைவி, ஒரு மகன் இருக்கின்றனர். 

இதனைதொடர்ந்து பழனியம்மாள் தனது மகன் சுப்பிரமணியனுடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி கூலிவேலை செய்துவரும் நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் இவர்கள் அனைவரும் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். 

பின் உறங்கிய நிலையில், பணியின் தாக்கத்தால் பழனியம்மாளுக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மருமகளை எழுப்பி தேநீர் போட்டுத்தருமாறு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்த கனகு தேநீர் போட்டு கொடுத்த நிலையில், அது ஆறியுள்ளதாக தெரிய வருகிறது. 

Daughter in law

இதனால், நான் சூடாக தேநீர் கேட்டேனே என்று பழனியம்மாள் கேள்வி எழுப்ப, நடுராத்திரியில் எதற்காக இப்படி தொல்லை செய்கிறீர்கள் என்று வார்த்தை வந்து பின் இருவருக்கும் இடையே கடும் விவாதம் நடந்துள்ளது. இந்த விவாதத்தில் ஆத்திரமடைந்த மருமகள் மாமியாரின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடிக்கவே, அவர் அலறியுள்ளார். 

சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பழனியம்மாளை விராலிமலை அரசு மருத்துவமனையில் மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழக்கவே, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கனகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.