தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா! இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா! இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,841-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலே கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னையில் மொத்தம் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1008 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.