தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா! இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சம்!

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா! இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சம்!


corona increased in tamilnadu


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்தில் இன்று மிக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.   

corona

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264ல் இருந்து 1,321 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில், 2,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்.