இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மத்திய அரசு அதிகாரி; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மத்திய அரசு அதிகாரி; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!



Coimbatore man Arrested by Cops Capturing Young Women bathing 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். 

அச்சமயம், பெண்ணின் வீட்டருகே வசித்துவரும் அபிலாஷ் (வயது 41) என்பவர், இளம்பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம்போடவே, அபிலாஷ் அங்கிருந்து தப்பிச்சென்றார். பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் விவரித்துள்ளார். 

இதனையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அபிலாஷின் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை வாங்கியுள்ளனர். அப்படியே அவர்களின் காலில் விழுந்த அபிலாஷ், தன்னை மன்னித்துவிட வேண்டியுள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் பெற்றோர், காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் அபிலாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை பூர்வேகமாக கொண்ட அபிலாஷ், மத்திய புள்ளியியல் துறை அதிகாரி என்பதும் தெரியவந்தது.