கோவை மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் - சிறைவாசிகள் இடையே கைகலப்பு; 4 காவலர்கள், 7 சிறைக்கைதிகள் படுகாயம்.!



coimbatore-central-jail-prisoners-cops-fight

 

கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில், இன்று காலை உணவு இடைவேளையின்போது சிறைக்காவலர்கள் - சிறைவாசிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. 

இந்த சண்டையில் 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை மத்திய சிறையில் 2,500-க்கும் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறை வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

காயமடைந்த 7 சிறைக்கைதிகள் சிறை வளாகத்தில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறை வளாகம் பரபரப்புடன் இருக்கிறது.