துள்ள துடிக்க ஒரு கொலை!..தடயங்களை மறைக்க மிளகாய் பொடி!.. குழம்பும் போலீசார்..!

துள்ள துடிக்க ஒரு கொலை!..தடயங்களை மறைக்க மிளகாய் பொடி!.. குழம்பும் போலீசார்..!



Chilli powder to cover the murder marks

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார்( 58). இவர் முத்தாண்டிக்குப்பம் அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் இயங்கிவரும் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அஞ்சலை தேவி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு திலீப்குமார், இயற்கை உபாதை கழித்து விட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.

பின்னர் நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திலீப்குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திலீப்குமார் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, காவல் நிலைய ஆய்வாளர்கள் நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், உதவி ஆய்வாளர் புஷ்பராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, திலீப்குமாரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திலீப்குமாரை மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும், கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களை மறைக்க கொலையாளிகள் மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை.

இதனையடுத்து திலீப்குமாரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை முன்விரோதம் காரணமாக யாரேனும் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.