#Video: உயிரிழந்த மகளின் உடலை தூக்கிக்கொண்டு, 10 கி.மீ நடந்தே வீட்டிற்கு சென்ற தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!



Chhattisgarh Father Walking with Died Daughter Body

மருத்துவ சிகிச்சையின் போது மகள் பரிதாபமாக உயிரிழந்துவிட, தந்தை மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா மாவட்டம், ஆம்தாலா கிராமத்தில் வசித்து வருபவர் ஈஸ்வர தாஸ். இவரின் மகள் சுரேகா. சுரேகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள சுகாதார மருத்துவமனைக்கு தந்தை மகளை அழைத்து சென்றுள்ளார். 

கடந்த சில நாட்களாக அதிதீவிர காய்ச்சலுடன் சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி, உடலின் ஆக்சிஜன் அளவு குறைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் சிறுமியின் உயிரிழப்பு குறித்து ஈஸ்வர தாஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அவசர ஊர்தி உதவியை நாடிய நிலையில், அவசர ஊர்தி கைவசம் இல்லாததால் காத்திருக்கும்படி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தனது மகளின் உடலை தோளில் வைத்து சுமந்தவாறு ஈஸ்வர தாஸ் 10 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். 

இந்த துயர வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகவே, இதுகுறித்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தியோ உத்தரவிட்டு இருக்கிறார்.