குழந்தை இல்லாத விரக்தியால் கணவன் - மனைவி சண்டை; 30 வயது இளம்பெண் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை..!

குழந்தை இல்லாத விரக்தியால் கணவன் - மனைவி சண்டை; 30 வயது இளம்பெண் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை..!


Chennai Vyasarpadi Girl Suicide Died

 

கடந்த 9 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால், விரக்தியடைந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரியார் நகரில் வசித்து வருபவர் விவேக். இவரின் மனைவி கவிதா (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆனால், தற்போது வரை இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் - மனைவியிடையே அவ்வப்போது தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் பிரச்சனை நடந்துள்ளது. 

chennai

இதனால் வாழ்க்கையில் மனவிரக்தியடைந்த கவிதா, கணவர் வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் மனைவியை பிணமாக பார்த்த நிலையில், செம்பியம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.