தமிழகத்தில் 18-ம் தேதி முதல் 21 வரை மிதமான மழை பெய்யலாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் 18-ம் தேதி முதல் 21 வரை மிதமான மழை பெய்யலாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



chennai-imd-rain-announcement

காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான செய்திகுறிப்பில், 18-ஆம் தேதியான இன்று முதல் 20-ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம் தேதியை பொறுத்தவரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை ஆனது 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் செங்கல்பட்டு, தூத்துக்குடி, நீலகிரியில் தலா 3 சென்டிமீட்டரும், திருவள்ளூரில் தலா 2 சென்டிமீட்டரும், ராணிப்பேட்டையில் தலா 1 சென்டிமீட்டர் மழையும். பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான மழை எச்சரிக்கையாக இன்று எதுவும் குறிப்பிடவில்லை.