ஜில்லென்று மாறிய சென்னை.. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை.! 

ஜில்லென்று மாறிய சென்னை.. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை.! 



Chennai City gets Rain from early morning oct 14 report

இன்று காலை சென்னை நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்து வருகின்றது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்து இருக்கின்றது. 

Chrnnai

அதன்படி தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Chrnnai

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதிகள் காலை முதலே வெயில் இல்லாமல் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது.