திருமணமான 9 மாதத்தில் திருநங்கையுடன் தொடர்பு: மனைவி கண்டித்ததால், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!

திருமணமான 9 மாதத்தில் திருநங்கையுடன் தொடர்பு: மனைவி கண்டித்ததால், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.!



Chengalpattu Youth Affair With Transgender Later 2 Suicide 


செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பழவேலி பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி விமலா. தம்பதிகளுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய இருக்கின்றனர். 

இதனிடையே, ராமுவுக்கு அப்பகுதியை சார்ந்த சரளா என்ற திருநங்கையுடன் பழகி இருக்கிறார். இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த விஷயத்தை அறிந்த விமலா தனது கணவரை கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்து போன ராமு, தனது கள்ளக்காதலி திருநங்கை சரளாவுடன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அவர்களின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.