நண்பனின் மனைவியை குடும்பம் நடத்த அழைத்த துரோகி; குழந்தை கண்முன் வெட்டிக்கொல்லப்பட்ட இளம்பெண்.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வெறிச்செயல்.!

நண்பனின் மனைவியை குடும்பம் நடத்த அழைத்த துரோகி; குழந்தை கண்முன் வெட்டிக்கொல்லப்பட்ட இளம்பெண்.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வெறிச்செயல்.!



Chengalpattu Maraimalainagar Women Killed by Affair Man 

 

நண்பனின் மனைவியை கள்ளகாதலியாக்கி துரோகியான இளைஞர், இறுதியில் கள்ளக்காதலியை கொலை செய்து சிறைப்பறவையாக மாறியுள்ள பயங்கரம் நடந்துள்ளது. அன்புடன் பழகிய நண்பனுக்கு துரோகம் இழைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு கிடைத்த இறுதி பரிசு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரின் மனைவி தாரணி. சுந்தரின் நண்பர் மேல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த சுஜின். இவர் செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், தாரணிக்கும் - சுஜீனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் பலநேரங்களில் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த சுந்தர், தனது மனைவி மற்றும் நண்பனை கண்டித்து கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட அறிவுறுத்தி இருக்கின்றார். 

சுஜினின் மனைவிக்கும் இவர்களின் விவகாரம் தெரியவரவே, சுஜினின் மனைவி ஆத்திரத்தில் தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, தனியே இருந்த சுஜின், தாரணியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். 

Chengalpattu

அவருக்கு அதில் உடன்பாடு இல்லாத நிலையில், நண்பன், மனைவி ஆகியோரின் பிரிவு சுஜினை மனதளவில் பாதித்துள்ளது. நேற்று மதியம் சுஜின் தனது கள்ளக்காதலி தாரணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடன் குடும்ப நடத்த தாராணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அப்போது பேசிய தாரணி, தான் வேலைபார்த்து வரும் பீனிக்ஸ் மாலில் பல நண்பர்கள் இருக்கும் நிலையில், நீ எனக்கு ஆளா? என பதில் வாக்குவாதம் நடந்துள்ளது. ஆத்திரமடைந்த சுஜின் தாரணியின் குழந்தை கண்முன்னே தாரணியை கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். 

விசாரணையில், இலட்சக்கணக்கில் தாரணிக்கு பணம் செலவு செய்தும், தன்னை அவமதித்ததால் கொலை செய்தேன் எனவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சுஜின் பதில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.