அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
சாத்தூரில் பரபரப்பு.. மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர்... போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம்..!
சாத்தூரில் பரபரப்பு.. மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர்... போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமிக்கு சாத்தூர் ஆண்டாள்புரத்தை சேர்ந்த கார்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே பெற்றோர் அவரை சிகிச்சைக்காக சாத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்த போது தன்னை கர்ப்பம் ஆக்கியது கார்த்தி என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கார்த்தியை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்தியை சிறையில் அடைத்துள்ளனர்.