14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்... போக்சோவில் கைது...!

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்... போக்சோவில் கைது...!



Boy who raped 14-year-old girl and made her pregnant... Arrested in Pocso...

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அசோக் நகரில் இருக்கும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த மதுபாலன்(34) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்து உள்ளனர். தனிமை கிடக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். 

இதை‌ தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மதுபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.