பெண் உடை மாற்றுவதை கதவு ஓட்டை வழியே எட்டிப்பார்த்த இளைஞர்.. கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பெண் உடை மாற்றுவதை கதவு ஓட்டை வழியே எட்டிப்பார்த்த இளைஞர்.. கதவை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!



Boy watching bathing girl in Cuddalore district

வீட்டில் தனியாக வசித்து வரும் இளம்பெண் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு இருந்த நிலையில், அதனை நோட்டமிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகர்ப்பகுதியில் வசித்து வரும் 38 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் 38 வயது பெண்மணி வீட்டில் தனியே இருக்கிறார். 

இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு இருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த கோடி செல்வன் (வயது 28) என்பவன், கதவு ஓட்டை வழியே பெண் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

Cuddalore District

உடை மாற்றிய பின்னர் பெண்மணி கதவை திறந்தபோது கோடி செல்வனின் அதிர்ச்சி செயல் அம்பலமாகவே, பதறிப்போன பெண்மணி திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, கோடி செல்வனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.