விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. ஒரு நொடியில் நிகழ்ந்த விபரீதம்.. பெற்றோர்களே உஷார்..!

விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. ஒரு நொடியில் நிகழ்ந்த விபரீதம்.. பெற்றோர்களே உஷார்..!



boy-dead-in-his-relative-house-due-to-holidays

விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா ஓரத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் மணியரசன். இவர் 5ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், பள்ளி விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மணியரசன் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த நிலையில், நீண்ட தூரத்தில் இருக்கும் ஒரு மின்கம்பத்தில் இருந்து, வீட்டிற்கும் மின் இணைப்பிற்காக அமைக்கப்பட்ட இரும்பு குழாயை தெரியாமல் பிடித்துள்ளார்.

அப்போது மின் குழாயில் கசிந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

thanjavur

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் மாணவர்களை பத்திரமாக பார்த்து கொள்ளும்படியும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.