லைக்குக்காக இளைஞர் செய்த வேலை., கொந்தளித்த பொதுமக்கள்..!!

லைக்குக்காக இளைஞர் செய்த வேலை., கொந்தளித்த பொதுமக்கள்..!!



boy blocked government bus to get likes in social media

ற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் லைக்குக்காக பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறார்கள். 

அதன் வரிசையில், திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லுகின்ற வழியில் இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து, பஸ் செல்ல முடியாத அளவிற்கு அவரது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இவரது இந்த செயல் பொதுமக்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. மேலும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவரது வண்டியில் இருந்து புகையை வெளியேற்றி வேகமாக ஓட்டி சென்றுள்ளார். 

இதனால் கடுமையான கோபத்திற்கு ஆளான பொதுமக்கள் இது போன்றவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.