முன்விரோதத்தால் வெடிகுண்டு மிரட்டல்., கணவன், மனைவி போலீசில் புகார்.!!

முன்விரோதத்தால் வெடிகுண்டு மிரட்டல்., கணவன், மனைவி போலீசில் புகார்.!!



Bomb threatening to husband and wife

புதுச்சேரியை சேர்ந்த மது என்பவரின் மனைவி லதா இவருக்கு வயது 36. மது மற்றும் அவரது மனைவி லதா இருவருக்கும் அவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மற்றும் ஜெயக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. 

இந்த நிலையில் மது மற்றும் லதா சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் லதாவின் தந்தைக்கு கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது மீன் மார்க்கெட் அருகே ஜெயக்குமார் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த லதாவையும் அவரது கணவர் மதுவையும் திடீரென வழிமறித்து உன்னை அடித்தே கொலை செய்து விடுவேன். உங்கள் வீட்டின் மீது வெடிகுண்டு வீசுவேன் என்று கண்டபடி பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா மற்றும் அவரது கணவர் மது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.