கோர்ட்டு வாசலில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்!!

கோர்ட்டு வாசலில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்!!



BJP member arrested who threatening to police

வாணியம்பாடியை சேர்ந்த 38 வயதுடைய வினோத்குமார் என்பவர், பாஜக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். 

இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வினோத் குமார் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்துள்ளார். 

அப்போது, காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதனும் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். அப்போது வினோத்குமார் காவல் உதவி ஆய்வாளர்  ஜெகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து,  வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.