சென்னை மக்களே., மழை சீசன் தொடங்குவதற்குள் படகு வாங்கிடலாமா? - பாஜக அண்ணாமலை கலாய்..!

சென்னை மக்களே., மழை சீசன் தொடங்குவதற்குள் படகு வாங்கிடலாமா? - பாஜக அண்ணாமலை கலாய்..!



bjp-annamalai-pressmeet-today

 

திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டன. முந்தைய அரசின் மீது விமர்சனம் வைப்பதை குறைத்துவிட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்தலாம் என அண்ணாமலை பேசினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கையில், "பருவமழை வரும்போது கூட அனைவரும் படகு வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறன். முதல்வரின் பதிலில் இருந்தே அடிப்படை பணிகள் நடைபெறவில்லை என்பது உறுதியானது. மேயர் அடுத்த ஆண்டு பணி முடியும் என்கிறார். அமைச்சர் அடுத்த ஆண்டு ஆகும் என்கிறார். ஆனால், பாஜக மக்களுக்காக என்றும் களத்தில் நிற்கும்.

bjp

திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதம் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் முந்தைய அதிமுக அரசின் மீது விமர்சனம் வைப்பீர்கள்?. மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கான நிதியை ஒதுக்கி கொடுக்கிறது. பணியை செய்வதில் என்ன பிரச்சனை?. சென்னைக்கு இரண்டாம் விமான நிலையம் தேவை. சென்னை வளரும். 

bjp

தமிழ்நாடு அரசு அதனை செயல்படுத்த எடுத்த மேற்கொண்ட விதம் தவறானது. பரந்தூரை பொறுத்த வரையில் மக்களிடம் பேசாமல் அரசே முடிவை எடுத்து பிரச்சனை செய்துவிட்டது. மத்திய அரசை பொறுத்த வரை இரண்டாவது விமான நிலையம் வேண்டும். இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை கமிட்டி தொடர்பான தகவல் வதந்தி" என்று பேசினார்.