வெள்ளம் போனா என்ன? நமக்கு நிகழ்ச்சி முக்கியம்-ப்பு.. கொட்டும் மழையிலும் ஜோராக நடைபெற்ற வளைகாப்பு..!

வெள்ளம் போனா என்ன? நமக்கு நிகழ்ச்சி முக்கியம்-ப்பு.. கொட்டும் மழையிலும் ஜோராக நடைபெற்ற வளைகாப்பு..!



Baby shower function in flood thirunelveli

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அடை மழையானது பெய்து வருகிறது. இதனால் தேசிய பேரிடர் மீட்புபடையினர் களத்தில் இறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

தற்போது வரை பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. ஒரு சில இடங்களில் கண்மாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் ரோஸ் மஹாலில் தம்பதிகளுக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

மழையினால் மண்டபத்திற்குள்ளும் நீர் புகுந்துள்ளது. இந்த காரணத்தால் மண்டபத்தின் மாடியில் வைத்து வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் தண்ணீரில் தம்பதிகளை இறங்கவிட்டு போட்டோசூட் நடத்தி இருக்கின்றனர்.