தேர்தல் நேரத்தில் அ.ம.மு.க பிரமுகர் வெட்டி கொலை! மதுரையில் பரபரப்பு!
தேர்தல் நேரத்தில் அ.ம.மு.க பிரமுகர் வெட்டி கொலை! மதுரையில் பரபரப்பு!
மதுரை அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும், அமமுக பிரமுகருமான அசோகன் சரமாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலூரில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகியுமான அசோகன் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த அசோகனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.