கழிவறையில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

கழிவறையில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!



Ambulance employee raped mentally challenged girl in Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ramanathapuram

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் வேறு ஒரு நோயாளியை கவனித்திருந்ததால், ஆம்புலன்ஸ் உதவியாளர் வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாக கூறி தாயை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அந்த பெண்ணை மட்டும் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வெளியில் ஓடிவந்த பெண் ஆயிரம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.

ramanathapuram

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனை தரப்பிலிருந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.