அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கடத்த முயன்ற இளைஞர்; தர்ம அடி கெடுத்த பொது மக்கள்..!!

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை கடத்த முயன்ற இளைஞர்; தர்ம அடி கெடுத்த பொது மக்கள்..!!


A young man who tried to kidnap the girl in the early morning; Dharma feet spoiled the public ..

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து ஐந்து வயது சிறுமியை கடத்த முயன்ற போதை ஆசாமிக்கு, தர்ம அடி. இராயப்பேட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ரோட்டரி நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் பிரபு (32). இவர் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் குடி போதையில், பிரபுவின் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரது ஐந்து வயது மகளை தூக்கிச் சென்றுள்ளார். இதைப் பார்த்த பிரபு அந்த இளைஞரை குடிக்க முயன்றார்.

இளைஞர் மது போதையில் இருந்ததால் ஓட முடியாமல் நிலைத்தடுமாறி வீட்டின் அருகிலேயே சிறுமியுடன் கீழே விழுந்தார். சிறுமையின் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் ஓடிவந்து இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ராயப்பேட்டை காவல் துறையினர், இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞர் ராயப்பேட்டையில் சாலையோரம் வசிக்கும், புருஷோத்தமன்(25) என்பதும், மது போதையில் சிறுமியை கடத்தியதும் தெரியவந்தது.