தீராத வயிற்று வலியினால் அவதியுற்ற பெண் எடுத்து விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்..!

தீராத வயிற்று வலியினால் அவதியுற்ற பெண் எடுத்து விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்..!



A woman suffering from intractable stomach pain took a tragic decision.. The family is screaming..!

திருத்தணி அருகே திருவாலங்காடு அடுத்த சிவாடா கிராமத்தில் வசித்து வருபவர்கள் துளசிராமன் - மோனிகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மோனிகா கடந்த சில மாதங்களாகவே கடுமையான வயிற்று வலியினால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குறையாமல் இருந்துள்ளது. இதனால் மனமடைந்து போன மோனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Women

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் மோனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.