ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்... காவல்துறை தீவிர விசாரணை.!

ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்... காவல்துறை தீவிர விசாரணை.!



a-mutilated-body-found-on-a-deserted-road-neartuticorin

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முகம் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்ட சடலத்தால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி சங்கராபேரியிலிருந்து ஜோதி நகர் செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

tamilnaduஅப்போது சடலத்தின் முகமானது சிதைக்கப்பட்டு ரத்த காயங்களுடன் காணப்பட்டது. இதனால் இறந்து கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்தவரை வாகனத்தில் கொண்டு வந்து இங்கு வீசி சென்று இருக்கலாம் எனவும் காவல்துறை சந்தேகிக்கிறது.

tamilnaduஇந்த சம்பவம் தொடர்பாக சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என தெரிய வந்திருக்கிறது.