அடப்பாவமே!! நட்பாக பழகிய இளம் பெண்ணின் கற்பை சூறையாடிய திருமணமான காமக்கொடூரன்..!
அடப்பாவமே!! நட்பாக பழகிய இளம் பெண்ணின் கற்பை சூறையாடிய திருமணமான காமக்கொடூரன்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கூலி தொழிலாளியாக வசித்து வருபவர் ரத்தினகுமார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரத்தினகுமார் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளம் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது ரத்தினகுமார் அத்துமீறி உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த அந்தப் பெண் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரத்தினக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.