கொடூரத்தின் உச்சம்... பைக்கில் சென்ற நபரை விரட்டிச் சென்று சாய்த்த கும்பல்... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!

கொடூரத்தின் உச்சம்... பைக்கில் சென்ற நபரை விரட்டிச் சென்று சாய்த்த கும்பல்... காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!



a-man-was-brutally-hacked-to-death-near-dindugal-police

திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் அருளானந்தபாபு (29). இவருக்கு சக்திவேல், தட்சிணாமூர்த்தி என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

tamilnaduஇந்நிலையில் இறந்த நண்பர்களின் தாயாரான முருகேஸ்வரி என்பவரை அருளானந்த பாபு மகனாக இருந்து கவனித்து வந்தார். அவருக்கு தேவையான உதவிகளை செய்வதோடு அடிக்கடி பார்த்து பேசி வந்தார். அதைப் போல நேற்றும் முருகேஸ்வரியை பார்த்து பேசி விட்டு அருளானந்த பாபு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தது.

tamilnaduஅவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் இறங்கி ஓடினார் அருளானந்த பாபு. ஆயினும் விடாமல் அவரைத் துரத்திய கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  விட்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.