காதலிக்க மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.. கைதான காமக்கொடூரன்..!

காதலிக்க மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.. கைதான காமக்கொடூரன்..!


a-horrible-incident-happened-to-a-girl-who-refused-to-l

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இளையூர் கண்டியம் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அந்த சிறுமியை தன்னை காதலிக்கும்படி ஜெயக்குமார் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்காக அந்த சிறுமியை பழிவாங்க எண்ணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமை கடத்தி முந்திரி காட்டில் உள்ள  தனிவீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

Kidnapped

மேலும் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார் ஜெயக்குமார். மேலும் இந்த கடத்தலுக்கு ஜெயக்குமாரின் தாய் சாந்தியும் உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதை தெரிந்து ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் முந்திரிக் காட்டில் இருந்து சிறுமியை மீட்ட போலீசார் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம் ஜெயக்குமார் மற்றும் அவரது தாய் சாந்தி மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.