பெரும் சோகம்.. பள்ளிக்கு கிளம்பிய மாணவன்.. மின் கம்பி அறுந்து விழுந்து பலியான சம்பவம்.!

பெரும் சோகம்.. பள்ளிக்கு கிளம்பிய மாணவன்.. மின் கம்பி அறுந்து விழுந்து பலியான சம்பவம்.!



a-great-tragedy-a-student-left-for-school-an-incident-w

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில்குமார் - இந்திரா காந்தி தம்பதியினர். இவர்களுக்கு ராஜ்குமார் என்று 10ம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார்.

இன்று காலை ராஜ்குமார் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் சென்ற ராஜ்குமார் மீது மின்சார கம்பி ஒன்று எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்துள்ளது. இதில் அலறி துடித்து கீழே விழுந்த ராஜ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

Student Died

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிக்குப் புறப்பட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.