திருவள்ளூரில் தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவர்... தூக்கு போட்டு தற்கொலை...!

திருவள்ளூரில் தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவர்... தூக்கு போட்டு தற்கொலை...!



A college student committed suicide by hanging himself in a private college hostel in Thiruvallur.

திருவள்ளூர் அருகே கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுவர் அருகே அரண்வாயல் குப்பத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அருகே உள்ள கௌரவம் பகுதியை சேர்ந்த மேதரமெட்லா பிட்சி ரெட்டியின் மகன் மொதராமெட்லா சரண் (18). இவர் இந்த கல்லூரியில் பி.இ. முதல் வருடம் படித்து வந்தார்.

வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய சரண், இரவில் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் காவலர்கள் சரணின் சடலத்தை கைபற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர், கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.