காதலில் பிறந்த குழந்தை.. புதரில் வீசிய கல்லூரி மாணவி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!



a-child-born-in-love-college-student-threw-in-the-bush

 திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள ராமவாய்க்கால் பகுதியில் கடந்த 5 ம் தேதி பிறந்து 3  நாட்களான அழகான ஆண் குழந்தை ஒன்று புதரில்  கிடந்து மீட்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே தகவல் அறிந்து விசாரணை நடத்திய போலீசார் புதரில் கிடந்த குழந்தை முக்கொம்பு அருகே எலமனூரை  சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியின் காதலில் பிறந்த குழந்தை என்று கண்டறியப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிப்பதை அறிந்த அந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவியை மீட்டு  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி  உயிர் இழந்தார்.

college girl

இதனை தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு அவரது குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் மாணவியின் குடும்ப உறுப்பினர்களை விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவியை காதலித்து கர்ப்பம் ஆக்கிய அதே ஊரை சேர்ந்த வாலிபரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.