சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் 94 வயது மூதாட்டி.!

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் 94 வயது மூதாட்டி.!



94 years old lady contest in state election

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி தேர்தலானது வருகிற 19 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு கொண்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் நடைப்பெற இருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டல பெசண்ட் நகர் 174 வது வார்டில் 94 வயது மூதாட்டி காமாட்சி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். 

state election

தமிழகத்தில் தற்போதைக்கு அதிக வயதுடைய வேட்பாளர்கள் பட்டியலில் காமாட்சி பாட்டி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.94 வயதாகும் காமாட்சி பாட்டிக்கு அந்த தொகுதியில் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறதாம். எனவே அந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.