மக்களே உஷார்: தனியாக சென்ற 8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

மக்களே உஷார்: தனியாக சென்ற 8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



8 years girl kitnaped by ice seller in thindukal

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் 8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரியை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐஸ் வருவதை பார்த்த 8 வயது சிறுமி தனியாக ஐஸ் வாங்க முகமது ரபிக் என்ற 50 வயது மதிக்கத்தக்க ஐஸ் வியாபாரியிடம் சென்றுள்ளார். அப்போது அந்த ஐஸ் வியாபாரி சிறுமியை அங்கிருந்த கோவிலின் பின்பு அழைத்து சென்று கை, கால்களை கட்டி வாயை துணியால் அடைத்துள்ளார்.

thindukkal

இவை அனைத்தையும் 5 வயது பார்த்து சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். உடனே சிறுமியை விட்டு விட்டு முகமது ரபிக் ஓடியுள்ளார். விடாமல் துரத்தி சென்று அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேடசந்தூர் சிறையில் முகமது ரபிக்கை அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.