இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த சிறுவன்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி..

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. தள்ளுவண்டியில் சடலமாக கிடந்த சிறுவன்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி..



5 years old boy dead without food

பசியால் 5 வயது சிறுவன்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில்தான் இந்த கோரசம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்த தள்ளுவண்டி ஒன்றில் 5 வயது சிறுவன் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு ப்ரேதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையின் முடிவில், சிறுவன் பசிக்கொடுமையால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதேநேரம், குழந்தைக்கு யாரும் உரிமை கூறாததால் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டினியால் குழந்தை உயிரிழந்த  சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.