தடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை! அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி!

தடுப்பூசி போட்டதால் அழுதுகொண்டிருந்த 5மாத குழந்தை! அதிகாலை பெற்றோரை துடிதுடிக்கவைத்து காத்திருந்த பேரிடி!


5 month baby dead after vaccination inject

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தில் வசித்து வருபவர் சிரஞ்சீவி. இவர் லாரி டிரைவராக உள்ளார்.இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு லித்தேஷ் என்ற 5 மாத குழந்தை இருந்தது. 

இந்நிலையில் குழந்தைக்கு சமீபத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குழந்தை சோர்வாகவே இருந்துள்ளது. மேலும் இரவு முழுவதும் அழுதுள்ளது. பின்னர் பாலூட்டி தூங்க வைத்த நிலையில் அதிகாலை குழந்தை அசைவில்லாமல் கிடந்துள்ளது. உடனே பதறிப்போன குழந்தையின் பெற்றோர்கள் அதனை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

vaccination

ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டால்தான் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.