தனியாக சென்ற 40 வயது பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்.. ஓட்டுநர் கைது.!

தனியாக சென்ற 40 வயது பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்.. ஓட்டுநர் கைது.!



40 years old girl raped in Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே 40 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் 40 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனிமையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கூலி வேலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

Krishnagiri

அப்போது அந்த வழியாக வந்த ஓட்டுநர் நிகில் என்ற இளைஞர் அந்தப் பெண்ணை வழிமறித்து வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

Krishnagiri

இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.