பெரும் சோகம்... சென்னையில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!!

பெரும் சோகம்... சென்னையில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!!



3-years-old-boy-fall-down-in-8-th-floor

சென்னை, நாவலூர் ஓஎம்ஆர் சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மணிகண்டன் - ஜிஜி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்‌. இவர்களுக்கு 3 வயதில் ஆரவ் என்ற ஆண் குழந்தை உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். 

சம்பவ தினத்தன்று தாய் ஜிஜி தனது மகனை அழைத்து கொண்டு கீழே சென்று விளையாடியுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய இருவரும் லிஃப்ட்டில் சென்றுள்ளனர். அப்போது தாய் ஜிஜி 5 வது மாடியில் இறங்கிய நிலையில் சிறுவன் மட்டும் இறங்காமல் லிஃப்ட்டில் உள்ளே இருந்துள்ளார். 

chennai

இதனால் லிஃப்ட் 8 வது மாடி வரை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் தாயை காணததால் ஆரவ் 8வது மாடியில் உள்ள பால்கனி வழியாக எட்டி பார்த்துள்ளார். அதில் கால் தவறி கீழே விழுந்துள்ளார் சிறுவன். உடனே சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.