#JustIn: இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பள்ளி மாணவர்கள் மரணம்.. விபத்தில் சிக்கி துள்ளதுடிக்க பலி.!!

#JustIn: இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பள்ளி மாணவர்கள் மரணம்.. விபத்தில் சிக்கி துள்ளதுடிக்க பலி.!!



3-school-students-who-were-traveling-on-a-two-wheeler-d-S6VH92

 

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் இன்று பயணம் செய்துள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்படவே, மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் யார்? என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர். 

Latest news

அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படிக்கும் வயதில் மாணவர்கள் கையில் இருசக்கர வாகனத்தை கொடுக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினாலும், ஒரு சிலரின் அலட்சியத்தால் இவ்வாறான துயரங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் மாணவர்கள் யார் என தெரியாத காரணத்தால் மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.