ஆத்தாடி! 23 வயதில் இத்தனை திருமணமா? சினிமாவையும் மிஞ்சிய காதல்மன்னனின் லீலைகள்! ஆடிப்போன போலீசார்கள்!
ஆத்தாடி! 23 வயதில் இத்தனை திருமணமா? சினிமாவையும் மிஞ்சிய காதல்மன்னனின் லீலைகள்! ஆடிப்போன போலீசார்கள்!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். 23 வயது நிறைந்த இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த 20 வயது நிறைந்த சத்யா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவரை திருப்பூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலைக்கு சென்று சந்தோஷ் வீடு திரும்பவில்லை. மனைவி சத்யாவும் இதுகுறித்து பலரிடமும் விசாரணை மேற்கொண்டும் எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் கீழையூரில் இருப்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார்கள் சந்தோஷின் மனைவியுடன் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சந்தோஷ் சசிகலா என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சசிகலா மற்றும் சத்யா மட்டுமின்றி மொத்தம் 8 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சந்தோஷ் தனித்தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.
மேலும் சந்தோஷிடம் ஏமாந்த எந்த பெண்ணிற்கும் அவருக்கு ஏற்கனவே திருமணமானது குறித்து தெரியாது. அதை தொடர்ந்து பல பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வரும் சந்தோசை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.