17 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்.. போலீசார் தீவிர விசாரணை!

17 வயது சிறுமி கடத்தி கூட்டு பலாத்காரம்.. போலீசார் தீவிர விசாரணை!



17 years old girl gangraped in vellakovil

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

Gang Rapped

அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தி  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் 6 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 9-ம் தேதி வெள்ளகோவில் பகுதியில் நடந்த தேர் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறுமி சென்றுள்ளார்.

Gang Rapped

அப்போது, அங்கு கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர்.