11 வயது சிறுமி கற்பழித்து படுகொலை.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!

11 வயது சிறுமி கற்பழித்து படுகொலை.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!



11-year-old-girl-was-raped-and-murdered-police-probe-in-XHDG2R

மதுரையைச் சேர்ந்த 11 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இறந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது.

மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அவரது வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சந்தேக வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

tamilnaduஇதனைத் தொடர்ந்து சந்தேக வழக்கை போக்சோ மற்றும் கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களின் துணையுடன் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கும் முன் மற்றொரு கொடூர சம்பவம் நடைபெற்று இருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.