வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
திருப்பதி கோவில் உண்டியலில் 100 கோடி திருடியது நான் தான்! ஆனால் அந்தரங்க பகுதியில்.... கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட முன்னாள் ஊழியர் ரவிக்குமார்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்பட்ட 100 கோடி உண்டியல் திருட்டு விவகாரம் மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியாகியுள்ள புதிய வாக்குமூலம் சம்பவத்துக்கு புதிய திருப்பமாக மாறியுள்ளது.
ரவிக்குமாரின் வீடியோ வாக்குமூலம்
திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் ஊழியரான ரவிக்குமார், வெளியிட்ட வீடியோவில் கண்ணீருடன், கோவில் உண்டியல் காணிக்கையில் இருந்து 100 கோடி ரூபாயை திருடியது தானே என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். "என்னுடைய சொத்துக்களில் 90 சதவீதத்தை ஏழுமலையான் பெயரில் எழுதித் தந்துவிட்டேன். எனை மேலும் துன்புறுத்த வேண்டாம்," என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிவந்த வதந்திகளை மறுப்பு
தன்னைச் சுற்றி பரவியிருந்த வதந்திகளில் எதற்கும் உண்மை இல்லை என ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, காணிக்கை பணத்தை திருடுவதற்காக தனக்கு அந்தரங்க பகுதியில் அறுவை சிகிச்சை செய்தார் என கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என உறுதியாக தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறல்
தனக்கு எதிராக வரும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றம் எத்தகைய ஆய்வை உத்தரவிட்டாலும் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும், தாம் மற்றும் அவரது குடும்பம் கடுமையான மன உளைச்சலில் உள்ளதை உணர்ச்சி மிகுந்த முறையில் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வாக்குமூலம் திருப்பதி தேவஸ்தானத்தை சார்ந்த விவகாரத்தில் மேலும் கேள்விகளை எழுப்பும் நிலையில், விசாரணை எவ்வாறு முன்னேறுகிறது என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
In a rare appearance, #Parakamani case accused CV Ravi Kumar released a selfie #video denying any bribery in donating his family’s properties to the TTD.
He claims false propaganda and blackmail targeted him and has sought a court-ordered medical examination. The case is… pic.twitter.com/jGGXtcwynD
— The Times Of India (@timesofindia) December 6, 2025
இதையும் படிங்க: நல்ல உறக்கம்... அமைச்சரவைக் கூட்டத்தில் சேரில் அமர்ந்து தூங்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்! வைரல் வீடியோ!