விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
வீட்டில் கண் திருஷ்டி இருப்பதன் அறிகுறிகள் இதுதானாம்! திருஷ்டியை போக்கும் வழிமுறைகள் இவைதான்! அவசியம் பார்த்து பயன்பெறுங்கள்....

வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அறிகுறிகளும், கண் திருஷ்டியின் விளைவுகளும் ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் பாப்போம்.
வீட்டில் சில விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தால், அது சாதாரணம் அல்ல என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக, எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் சில முக்கியமான அறிகுறிகள் தெரிந்துகொளலாம். அதுபோல், கண் திருஷ்டி போன்ற திருஷ்டி தோஷங்களும் வீட்டில் பாதிப்பு ஏற்படுத்தலாம்.
கண் திருஷ்டியின் தாக்கம்
இந்துமத ஜோதிட சாஸ்திரம் படி, திருஷ்டிகளில் மோசமானது கண் திருஷ்டி எனப்படுகிறது. ஒரு மனிதனின் கண்ணில் உள்ள ஆர்வம், பொறாமை, ஆசை போன்றவை திருஷ்டியாக மாறி எதிர்பாராத தடைகளை ஏற்படுத்தும். இதனால், வீட்டில் நல்ல காரியங்கள் தடைப்படும், அங்கம் அங்கமாக குழப்பங்கள் ஏற்படும்.
திருஷ்டி போக்கும் வழிமுறைகள்
திருஷ்டி போக்குவதற்காக பலரும் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுகிறார்கள்:
திருஷ்டி கழிப்பது – உப்பு, கற்பூரம், சிவந்த மிளகாய் போன்றவற்றை வட்டமாக சுற்றி எரிப்பது.
திருஷ்டி பொம்மை – வீட்டின் முன் பகுதியில் வைக்கப்படும் குப்பைமுனி போன்ற பொம்மைகள்.
மந்திர உச்சாரம் – “நமச்சிவாய” போன்ற கடவுள் நாமங்களை கூறுவது.
வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அறிகுறிகள்
1. நாய்கள் அடிக்கடி அழுவது:
உங்கள் வீட்டைச் சுற்றி நாய்கள் தொடர்ந்து அழுவதை கேட்டால், அது அங்கு கெட்ட சக்தி இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இன்றைய தினம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு மட்டும் அதிஷ்டமாம் ! முழு விபரம் உள்ளே
2. பூஞ்சை ஏற்படுவது:
வீட்டில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை காணப்படுவதால், அந்த இடத்தில் சக்தி சமநிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இது மனஅமைதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
3. மூன்று மணி நேரத்தில் முழிப்பு:
அதிகாலை 3 மணிக்கு அடிக்கடி விழித்து விடுவது எதிர்மறை ஆற்றலால் உங்களைச் சூழ்ந்திருக்கிறதைக் காட்டும். இது ஆற்றல் மட்டுமின்றி மன உறுதியையும் பாதிக்கக்கூடியது.
எதிர்மறை சக்தியை போக்கும் ஆலோசனைகள்
தினமும் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஹனுமான் சாலிசா போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம்.
வீட்டை வாரந்தோறும் தூய்மைப்படுத்தி தூபம் காட்டலாம்.
குப்பைகள், பழைய பொருட்கள், பழைய கழுவப்படாத ஆடைகள் போன்றவை வீட்டில் சேகரிக்காமல் பராமரிக்க வேண்டும்.
வீட்டில் நேர்மறையான சக்தி நிலைத்திருக்க, தூய்மை, பக்தி மற்றும் ஆன்மிக சாதனைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். எதிர்மறை சக்திகளும், கண் திருஷ்டியும் நமக்கு ஏற்படுத்தும் தடைகளை தவிர்க்க சாஸ்திர அறிவுரைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்.
இதையும் படிங்க: முக்கிய பதிவு : பெண்கள் பழைய தாலி கயிறை மாற்ற சரியான நேரம் எது? எங்கு மாற்றனும் தெரியுமா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.....