உலக ஆணழகன் போட்டி: 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்.!
உலக ஆணழகன் போட்டி: 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் கெத்து காட்டிய தமிழக வீரர்கள்.!
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டிற்கான உலக ஆணழகன் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை தமிழக வீரர் சென்னையைச் சேர்ந்த சுரேஷ், முதலிடம் பிடித்து உலக ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
மேலும், 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற அதே பிரிவில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். அதேபோல், சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.